பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு……..

370 0

குவைத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

57 இலங்கைப் பணியாளர்கள் இன்று இவ்வாறு மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத்துக்குச் சென்று, அங்கு பல்வேறு இன்னல்கள், மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கே இவ்வாறு மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 9 ஆண்களும், 48 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ளவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்வதற்கான கொடுப்பனவுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.