இலங்கையின் 553வது காவல் நிலையம் திறப்பு

341 0

25-tamil-nadu-police3-5600இலங்கையின் 553வது காவல் நிலையம் இன்று பட்டிப்பளையில் திறக்கப்படுள்ளது.

காவல்துறை துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இதனை உத்தியோக பூர்வமாக திறந்துவைத்தார்இ

அங்கு உரையாற்றிய காவல்துறை மா அதிபர், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சகல மாவட்டங்களிலும் பொது மக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இதுதவிர, பொதுக்கள் எதிர்நோக்கும் எந்தவகையிலும் பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத சந்தர்ப்பத்தில் தமது தனிப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கமான 0718592020 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் தகவல்கள் குறித்த இரசிய தன்மை பேணப்படும் எனவும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயதுந்தர உறுதியளித்தார்.