எட்கா ஒப்பத்ததிற்கு ஆதரவு தருவது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை – சுதந்திர கூட்டமைப்பு

320 0

fotor0507213018எட்கா உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்க இது வரை தீர்மானிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளது.

அக்குனகொலபலச பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சுதந்திர கட்சியின் யோசனைகள் உள்ளடக்கப்படாவிட்டால், சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.