ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்கள் அழைத்து வரும் நடவடிக்கைகளையும் உள்ளகரீதியாக இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அது ஈடுபடும் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ப்லிப்போ க்ரான்டி (Filipo Grandi) தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரத்தின் 67வது அமர்வு நடைபெற்றபோது இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவீநாத் ஆரியசிங்க, இலங்கையின் கொள்கைகளை விளக்கிய பின்னரே, க்ரான்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு திரும்பும் அகதிகளுக்கு தேவையான உதவிகளை இலங்கை அரசாங்கம் வழங்கும்.
அத்துடன், அவர்களை மீண்டும் குடியமர்த்தல் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான உதவிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த திட்டங்களுக்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்புகள் அவசியம் என்றும் ஆரியசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

