கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

192 0

கெசல்வத்த ​பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாங்சிஆரச்சிவத்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கெசல்வத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கெசல்வத்த பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கெசல்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.