ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித உடன்பாடும் இல்லை-ரோஹண

199 0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித பொது உடன்பாடும் எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ கூறியுள்ளார். 

உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் இரண்டு கட்சிகளினதும் தலைவர்களின் உடன்பாட்டுக்கமைய ஒரு வேட்பாளரை பெயரிட நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். 

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.