பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தும் – திலக் மாரப்பன

249 0

பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை குறித்த 40/1 என்ற பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இதன்போது இலங்கை சார்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் திலக் மாரப்பன இதனை குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இந்த பிரேரணை ஊடாக இலங்கை வெளிக்காட்டிய முன்னேற்றங்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தும்.

இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

அத்துடன் உறுப்பு நாடுகளுக்கும் பிரேரணையை தயாரித்த நாடுகளுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.