நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

246 0

லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் 04ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

இது தொடர்பான தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருவதாக இதன்போது இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு விளக்கமளித்தனர்.