போயா தினத்தில் மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

514 0

வவுனியா ஹொறவப்பொத்தான வீதி, இறம்பைக்குளம் பகுதியில் போய தினமான நேற்று மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போயா தினமான நேற்று வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வு பிரிவினருடன், போதை ஒழிப்புப்பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹொறவப்பொத்தான வீதி, இறம்பைக்குளம் பகுதியில் இரவு 8 மணியளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதியில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் தமது சோதனையின்போது 17முழுப்போத்தல் மற்றும் 9காப்போத்தல் மதுபானத்தைக் கைப்பற்றியதுடன் 40வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

போயா தினத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாட்டினை பதிவு செய்த பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.