விபச்சார விடுதி சுற்றிவளைப்பு, மூன்று பெண்கள் கைது

268 0

கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் அதன் முகாமையாளர் உட்பட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களு வீதி, ரத்மலான பகுதியில் விபச்சார விடுதியொன்று இயங்குவதாக கல்கிஸ்ஸ பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற அனுமதியுடன், நேற்று பிற்பகல் 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள்  46, 29 மற்றும் 40 வயதுடைய ரத்மலானை, பளுகஸ்வாவ, போத்தல மற்றும் பிடிபத்தர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

அத்துடன், சந்தேக நபர்களை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் நேற்றைய தினம் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.