யாழில் வீடு புகுந்து கொள்ளையிட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

286 0

வீடு புகுந்து கொள்ளையிட்டமை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெல்லிப்பளை வீமன் காமம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனையே தெல்லிப்பளை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்தனர். 

குறித்த இளைஞனை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , நீதிவான் இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

தெல்லிப்பளை கட்டுவான் பகுதியில் உள்ள அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்து , வீட்டில் இருந்தவர்களை காயப்படுத்தி நகை பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்ற குழுவின் பிரதான சந்தேக நபர் இவரெனவும் பொலிசார் தெரிவித்தனர்.. 

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றசாட்டில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.