நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், குடிபோதையில் வாகனத்தை செலுத்திய ஆயிரத்து 321 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி முதல் நேற்று 19 ஆம் திகதி வரை குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 27 ஆயிரத்து 954 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது