கொடதெனியாவப் பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குதன்வத்தைப் பகுதியில் நேற்று பேலியாகொடை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இவர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பெலிகஸ்வத்த – கொடதெனியாவப் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.