இன்று காலை மலையகத்தில் சில பகுதிகளில் சிறிதளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை,வெலிமடை, ஹாலி- எல, பச்சறை, நுவரெலியா, ஹக்கலை பகுதியில் இன்று காலை 8.15 மணி முதல் 8.30 மணிவரை சிறிதளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .