கடந்த மூன்றரை வருடங்களில் வடகிழக்கில் 20,715 வீடுகள்-சுவாமி

257 0

கடந்த மூன்றரை வருடங்களில் மீள்குடியேற்ற அமைச்சினால் 8,50,000 ரூபா பெறுமதியான 20,715 வீடுகள் வடக்கு, கிழக்கில் வாழும்  குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சபையில் தெரிவித்தார். 

அத்துடன் சேதமடைந்த வீடுகளை  திருத்துவதற்காக தலா  ஒரு இலட்சம் ரூபா  வீதம் 3147 பயனாளிகளுக்கு நிதி  வழங்கப்பட்டுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டு  12,757 பயனாளிகளுக்கும்  2017 ஆம் ஆண்டு  4116 பயனாளிகளுக்கும்  2018 ஆம் ஆண்டு 3660 பயனாளிகளுக்குமாக மொத்தமாக 20,533 பயனாளிகளுக்கும்  வாழ்வாதார உதவிகள்  வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று 2016 ஆ ம் ஆண்டு 7598 மலசல கூடங்களும்  2017 ஆம் ஆண்டு 4496மலசல  கூடங்களும்  2018 ஆம் ஆண்டு  5716 மலசல  கூடங்களுமாக  மொத்தம்  17810 மலசல  கூடங்களும்  நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் குடிநீர் வசதியை  மேம்படுத்தல், இலவச மின்சார இணைப்பை வழங்குதல், உள்ளக வீதிகள் புனரமைப்பு, சிறு குளங்கள்  புனரமைப்பு, நுண்கடன்  சுமையுள்ளவர்களுக்கான உதவி சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு  திட்டம்,காணிகளை  விடுவிப்பதற்காக  செயல்திட்டம்,யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  சேதமடைந்த சொத்தழிவுகளுக்கான  நட்டஈடு  வழங்கும்  திட்டம், சுயதொழில்  உதவிகள் ,விசேட திட்டங்கள் என பலவாழிகளிலும் மக்களுக்கான உதவிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.