மாணவர்களின் கோரிக்கை நியாயமானது – தயாசிறி

277 0

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முறையற்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

போராட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது முறையற்ற விதத்தில் தாக்குதல்களை மேற்கொள்ளும் அரசாங்கம் ஒழிக்கப்பட வேண்டும். 

பேச்சுவார்த்தைகளுக்கு கூட வாய்ப்பு வழங்காமல் தான்தோன்றித்தனமாக செயற்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று பொதுதுஜன பெரமுன – சுதந்திர கட்சிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.