ரஷ்ய பிரஜை கைது

230 0

வீசா அனுமதிப்பத்திரமின்றி அளுத்கமை பிரதேசத்தில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அளுத்கமை டிப்போ அருகாமையில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.