மாணிக்க கல் கொள்ளை தொடர்பில் வெளிநாட்டுப் பெண் கைது

293 0

களுத்துறை வடக்குப் பிரதேசத்தில் சுமார் 65 இலட்சம் ரூபா மதிப்புள்ள மாணிக்ககல் கொள்ளை சம்பவம் தொடர்பில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் உட்பட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ம் திகதி களுத்துறை வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 03 மாணிக்க கற்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. 

அதன்படி களுத்துறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கொள்ளையடிக்கப்பட்ட மாணிக்க கல் மற்றும் ஜீப் வண்டி ஒன்றுடன் நீர்கொழும்பில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

34, 36, 39 மற்றும் 43 வயதுகளுடைய மதுகம, அங்கொட மற்றும் அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட  வெளிநாட்டுப் பெண் 43 வயதுடைய மொங்கொலிய நாட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Share