‘என்னை அச்சுறுத்த வேண்டாம்’- வீரவன்சவுக்கு எச்சரிக்கை விடுத்தார் சபாநாயகர்

312 0

karuபெறுமதி சேர் வரி சட்டமூலத்தை அமைச்சரவையின் அனுமதியுடன் சரியாக வர்த்தமானியில் அச்சிட்டு வெளியிட்டமை தொடர்பில் அச்சக அதிபர் மற்றும் சட்டமா அதிபர் முன்வைத்த ஆவணங்களை பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சபையில் தாக்கல் செய்தார்.

இதன்போது  சபையில் உரையாற்றிய விமல் வீரவன்ச,  சபாநாயகர் கரு ஜயசூரியவை இது தொடர்பில்  எனக்கு தெளிவுபடுத்த இடமளியுங்கள்.

இந்த ஆவணங்கள் எமது கேள்விக்குரியதல்ல. நாங்கள் பேசுவதற்கு இடமளியுங்கள். நீங்கள் பக்கச்சார்பாக செயற்படுகிறீர்கள் என உறையாற்றினார்.

இதனால் போபமடைந்த சபாநாயகர் விமல் வீரவன்சவை என்ன சொன்னீர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீங்கள் அமருங்கள். நான் நேற்று இது குறித்து முடிவை அறிவித்தேன்.

என்னை அச்சுறுத்த வேண்டாம் என வீரவன்சவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.