அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுப்பட்ட மூவர் கைது

259 0

Sகிழக்கு கடற்படையினர் வாழைச்சேனை கடற்பகுதியில் நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்துள்ளதுடன்,

கிழக்கு கடற்படையினரால் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களிடமிருந்து மீன்வலை மற்றும் மீன்பிடி படகொன்றையும் மீட்டுள்ளனர்.

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக மட்டகளப்பு கடற்துறை மீன்வள பணிப்பாளர் காரியாலயத்திற்கு ஒப்படைக்க உள்ளதுடன், பறிமுதல் செய்த மீன்வலை மற்றும் மீன்பிடி படகையும் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.