கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஜனவரி – ஏப்ரல் வரை 200 விமானசேவைகள் ரத்து!

277 0

asdas1-1கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் விமான ஓடுபாதைகள் புனரமைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம்வரை சிறீலங்கன் விமானசேவையானது தனது 200 விமானப் பயணங்களை ரத்துச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஜனவரியிலிருந்து நான்கு மாதங்கள் புனரமைப்பு வேலைகள் நடைபெறவுள்ளதாக சிறீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா விமானப் பயணத்துக்கான ஓடுபாதைகளை புனரமைப்புச் செய்வதற்காக 47மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமெனவும் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.