மஹிந்த ஓரணியில் இணைந்து முன்மாதிரியாக திகழ வேண்டும்!

258 0

ஜனாதிபதியும் -பிரதமரும் இணைந்து இந்த ஆண்டில் நாட்டினை சரியான திகைக்கு கொண்டுசெல்லும்  வேலைத்திட்டத்தை  முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி செய்சா, இதற்கு மேலதிக ஒத்துழைப்பு வேண்டும் என்றால் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் இணைந்துக்கொண்டு நாட்டுக்கு ஒரு முன்மாதிரியான அரசியலை முன்னெடுத்துக்காட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவுசெலவு திட்டம் மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்துள்ள வரவு செலவு திட்டம் இந்த நாட்டினை சரியான திசைக்கு கொண்டுசெல்லும் மிகச்சிறந்த வரவுசெலவு திட்டமாகும். சகல துறைகள் குறித்து அவர் தூரநோக்கு சிந்தனையில் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்துள்ளார். ஆகவே இந்த வரவு செலவு திட்டத்தின் மூலமாக மிகச்சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றார்.