விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது மகளும் பலி!

266 0

குருணாகல் சாரகம வாவிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். 

முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்றுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது 02 வயது மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

முச்சக்கர வண்டியில் பயணித்த அவரது மனைவி, மனைவியின் தாய் மற்றும் தந்தை படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாழலயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் தந்தை முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.