ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

283 0

ஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கொட்டாஞ்சேனைபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால்,குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் 2080 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், வாள் ஒன்றும் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நீண்ட காலமாக ஐஸ் வகைப் போதைப் பொருள் வியாபாரத்தில் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.