நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்பு

281 0

அத்தனாகலு ஓயாவில் மூழ்கி காணாமல்போன் நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சீதுவை பொலிஸ் பிரிவிற்டகுட்பட்ட கொடுகொட வீதியின் பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அத்தனாகலு ஓயாவில் முகம் கழுவுவதற்காகச் சென்ற நபரொருவர் நீரில் அடித்துச்  செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக சீதுவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

அதையடுத்து மேற்கு கடற்படை கட்டளை தலைமைகத்தின் 6 சுழியோடிகள் நீரில்மூழ்கிய நபரை தேடும் பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர். 

இத் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இன்று காலை குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மிஹிரிகம பதுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.