அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும்-ரணில்

296 0

ranil

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாதீட்டில், புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

 

இலங்கை – நியூசிலாந்து வர்த்தகப் பேரவையில் வைத்து, முதலீட்டாளர்களை சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கைத்தொழிற்றுறைகளில் மேற்கொள்ளப்படும் பாரிய, நடுத்தர மற்றும் சிறிய தரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாதீடு, புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.