மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனுக்கு பிணை

287 0

பம்பலப்பிட்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரியை டிபெண்டர் வாகனத்தில் மோதிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பிணை நிபந்தனை நிறைவேற்றப்படாத காரணத்தினால் ஐந்து பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். 

எனினும் டிப்பெண்டர் வாகனத்தை செலுத்திய சாரதி எதிர்வரும் 11 திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட மேலும் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.