மஹிந்தானந்தவின் மகன் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்-unp

266 0

பொரளை பொலிஸ் நிலைய போக்குவாரத்து பிரிவின் பொறுப்பு அதிகாரியின் வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் மீது விசாரனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் நளின் பண்டார குறிப்பிடுகையில்,

வீதியில் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மஹிந்தானந்தா அளுத்கமகேவின் மகன் பயணித்த டிபெண்டர் வாகனம் மோதியதையடுத்து, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் பயணிப்பதை பார்க்கும் போது இதனை திடீர் விபத்தாக கருத முடியாது. ஆகவே இந்த விபத்து குறித்து விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.