உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான இறுதி திகதி இன்று!

272 0


கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் மாதிரி விண்ணப்பப்படிவதை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

அத்துடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.