இந்தியாவின் பாரமுல்லா இராணுவ முகாம் மீது தாக்குதல்-ஒருவர் பலி

317 0

kashmeer

இந்தியாவின் பாரமுல்லா இராணுவ முகாம் மீது இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அண்மைக்காலமாக இந்தியா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்துள்ளது.

 

இந்தியாவின் காஸ்மீர் எல்லையில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோருடன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், இந்திய எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலுமொருவர் காயமடைந்ததாகவும் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியிலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், பாரமுல்லாவில் இருக்கின்ற இந்திய இராணுவ முகாமை தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை எறிந்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதால், இருதரப்புக்கும் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஊரி பகுதியில் காணப்பட்ட இந்திய இராணுவ தளம் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதிலிருந்து, காஷ்மீர் தங்களுடையது என்று உரிமை கோரி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில், முறுகல் நிலை அதிகரித்து வருகிறது.

 

அப்பகுதியில் தீவிரவாதத் தளங்களுக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடாத்தி இருப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.