போதைப்பொருள் தொடர்பான எந்தவொரு பரிசோதனைக்கும் தான் தயார் – சுசில்

181 0

போதைப் பொருள் பாவனைத் தொடர்பான எந்தவொரு பரிசோதனைக்கும் தான் தயாரென பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பான இரத்த மாதிரி பரிசோதனைக்கும் அழைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ள சுசில் பிரேமஜயந்த தான் எந்தவொரு பரிசோதனைக்கும் தயாரென்றும் தெரிவித்துள்ளார்.