முச்சக்கர வண்டி விபத்தில் தாயும் மகளும் பலி

174 0

கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியின் தங்கல்ல, சீனிமோதர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாய் ஒருவரும் சிறு குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (19) காலை முச்சக்கரவண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுனர், அவரின் மனைவி மற்றும் மகள் தங்கல்ல வைத்தியசாலையில் அனிமதிக்கப்பட்ட பின்னர் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

லுணுகம்வெஹர பகுதியை சேர்ந்த 37 வயதுடைய தாயும் 3 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.