இலங்கை மீன­வர்­கள் இந்­தி­ய கடற்படையினரால் கைது!

371 0

இந்­தி­யக் கடல் எல்­லைக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­ குற்­றச்­சாட்­டில் இலங்கை மீன­வர்­கள் 25 பேர் இந்­தி­ய கடற்படையினர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

குறித்த மீனவர்கள் இந்­தி­யா­வின் நாகை அருகே கைது செய்­யப்­பட்­டுள்ளதாக  இந்­தி­யச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

கைது செய்­யப்­பட்ட மீன­வர்­க­ளும், அவர்­க­ளின் பட­கு­க­ளும் காரைக்­கால் துறை­மு­கத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்ளதாகவும், கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் அந்த நாட்­டுப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அதே­வேளை, இது தொடர்­பாக இலங்கை கடற்­ப­டைத் தரப்­புக்­க­ளி­டம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது ஒரு பட­கும் 5 மீன­வர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்றே இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­யக் கிடைத்­துள்­ளது.