மணல் ஏற்றிச்சென்ற வாகனம் மோதியதில் ஒருவர் பலி

215 0

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றும்,எதிரில் வந்த மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில்,மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் ஆலோசகர் ஸ்தலத்திலேயே பலியானதுடன்,அவரது மனைவி கடுங்காயங்களுடன் மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இவ் விபத்து மகியங்கனை – பதியத்தலாவை வீதியில் 98 வது மைல் கல்லருகே இன்று இடம்பெற்றுள்ளது.

மகியங்கனை கல்வி வலய ஆசிரியர் ஆலோசகரான 54 வயது நிரம்பியவரே விபத்தில் ஸ்தலத்தில் பலியானவராவார்.

 இவரது மனைவி கடுங்காயங்களுடன் மகியங்கனை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இடம்பெற்ற இடத்திற்கு ஸ்தல விசாரணைகளை மேற்கொள்ள சென்ற மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதுடன்,விபத்துக்குள்ளான டிப்பர் வாகன சாரதியை ஐந்து இலட்ச ரூபா சரீரப் பிணையிலும்,ஐந்தாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.

விபத்து குறித்து மகியங்கனைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.