குடும்பத் தகராரில் ஒருவர் பலி!

227 0

பொரலஸ்கமுவ- கஹடகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

வெரஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கும் மனைவிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மனைவியின் முன்னாள் கணவனின் மகன் குறித்த கொலையை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

குறித்த சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.