ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 70 முறைப்பாடுகள்

195 0

2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரையான காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்டும் ஊழல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 70 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

அவை சம்ந்தமாக விசாரணை எதிர்வரும் 28ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்டும் ஊழல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 14ம் திகதி கூடியுள்ளது. 

இதன்போது ஆணைக்குழுவுக்கு முதலில் கிடைத்த 48 முறைப்பாடுகளில் 02 ஐ விசாரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.