அங்குலான, புகையிரத வீதி பிரதேசத்தில் வைத்து சுமார் 05 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடமிருந்து 03 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மொரட்டுவ, லுனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய மற்றொரு சந்தேகநபர் 02. கிராமும் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.