பதவி மோகம் உள்ள சிலரை இணைத்துக் கொள்ளவே தேசிய அரசாங்கம்- பிரசன்ன

199 0

நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்கும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர முயற்சிக்கும் தேசிய அரசாங்க யோசனைக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லை. இதனைச் சமாளிப்பதற்காகவே பதவி ஆசையுள்ள சிலருக்கு அமைச்சுப் பதவியைக் கொடுத்து தம்முடன் இணைத்துக் கொள்ள முயற்சி இடம்பெறுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த மாதமளவில் இந்த யோசனை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு கொண்டு வந்தால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதனைத் தோற்கடிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.