போதை வில்லைகளுடன் நபர் ஒருவர் கைது

261 0

மினுவங்கொடை – எசெல்ல பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

குறித்த நபரிடமிருந்து கஞ்சா கலவையால் செய்யப்பட்ட 4,438 மதனமோதகம் போதை வில்லைகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விவாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.