யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது (காணொளி)

326 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த கட்டடத்தை திறந்து வைத்தார்.

600 மில்லியன் ரூபா செலவில்,விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அகிலவிராஜ் காரியவசம், விஜயகலா மகேஸ்வரன், சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் உட்பட, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.