யாழ்ப்பாணம் மயிலிட்டியில், வீடமைப்புத்திட்ட பணிகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன (காணொளி)

294 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், யாழ்ப்பாணம் மயிலிட்டியில், வீடமைப்புத் திட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் மயிலிட்டியில் மீள்குடியேறிய மக்களின் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில் ஆராய்ந்த, பிரதமர் மற்றும் அமைச்சர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், மயிலிட்டிக்கு சென்று, வீட்டுத்திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இதன் போது, அண்மையில் மீள்குடியேறிய மக்களுக்கான, காணி உறுதிச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படட்டன.