யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில், ஆராயப்பட்டுள்ளது(காணொளி)

322 0

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஆராயப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

அந்த வகையில்,பலாலி விமான நிலையத்திற்கு சென்ற, பிரதமர் மற்றும் அமைச்சர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது, அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, ராஜித சேனரத்ன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேயவர்தன,சாலக ரத்நாயக்க, ரிசாத் பதியூதீன், விஐயகலா மகேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.