யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில், ஆராயப்பட்டுள்ளது (காணொளி)

282 0

வடக்கு மாகாணத்திற்கு, மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர், யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது, அமைச்சர்களான் ராஜித சேனரத்ன, அகில விராஜ் காரியவசம்,வஜிர அபேயவர்தன,சாலக ரத்நாயக்க, விஐயகலா மகேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ,சி.சிறிதரன் உட்பட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்,அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.