திருத்தப்பணி காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் நாளை மறுதினம் காலை 5 மணிவரையான 21 மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிப்பிட்டி மற்றும் ருக்மல்கம ஆகிய பகுதியில் நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பெலென்வத்தை, மத்தெகொடை, ஹோமாகமை, மீபே மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேசங்களிலும் திருத்தப்பணிக்காரணமாக தற்காலிக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.