மார்ச் மாதத்திற்குள் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

299 0

எதிர்வரும் மார்ச் மாத நிறைவிற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு  தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பொதுமக்களுக்கு இலவசமாக கண்வில்லைகள் வழங்குவதன் மூலம் பாரிய சேவை முன்னெடுக்கப்படுகிறது. புற்றுநோயாளர்களுக்குத் தேவையான மருந்து பொருட்கள் மூன்று தடவைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் மருந்து பொருட்கள் 73இன் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 27 மருந்துப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a comment