கல்வியியல் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு

281 0

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2016 – 2017 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியெத்திய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். தபால் மூலமும் இணையத்தளம் மூலமாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். 

கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை புதிதாக எட்டாயிரம் மாணவர்களை இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் பெறப்பட்டுள்ள ஆகக்கூடிய ஆற்றல்களுக்கு அமைவாக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். 

பாடசாலையிலுள்ள வெற்றிடங்களை கவனத்திற் கொண்டு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment