வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்கள் உட்பட ஐவர் கைது

219 0

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐந்து பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் மூன்று ஆண்கள் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், 2 பெண்கள் மீரிகம பகுதியைச் சேர்ந்தவர்களும் ஆவார். 

இவர்களிடமிருந்து 286 பெட்டிகளில் 57,200 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 31,46,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேருக்கு சுங்க அதிகாரிகள் 150,000 ரூபா அபராதம் விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment