
தொம்பே, வனலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
வாக்குவாதம் மோதலாக மாறியதில் நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வனலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமான ஜோடி ஒன்றுக்கே சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

