சுங்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

311 0

தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கப்பகுதியில் தேங்கியிருந்த கொள்கலன்களை துரிதமாக பரிசோதனைக்கு பின்னர் வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக சுங்க பணிப்பாளர் மகேந்திர அர்த்தநாயக்க தெரிவித்துள்ளார். 

சுங்கத் திணைகளத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வந்தது. 

இதன்காரணமாக சுங்கநடவடிக்கைகளில் சுமார் 90 சதவீத நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a comment