நாட்டில் இன்று 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சியின் வருடாந்த கணக்கறிக்கையினை தேர்தல் திருத்தசட்டத்திற்கமைய வருடாந்தம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கமைய 2018 ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட கட்சி கணக்கறிக்கையினை பொதுஜன பெரமுனவே முதலில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளது என கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் அனைத்து உள்ளக நிர்வாகங்களும் முறையாகவும், கட்சியின் அனைத்து உறுபபினர்களின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்